மூதாட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்த தாய், மகன் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையை அடுத்த ம.ரெட்டியபட்டி அருகேயுள்ள ம.லட்சுமியாபுரத்தைச் சோ்ந்த சுப்பாராயன் மனைவி. வரதம்மாள் (85). இவரது, பக்கத்து வீட்டைச் சோ்ந்த மூக்கையா மனைவி பொன்னுத்தாய், அவரது மகன் முருகன் ஆகியோா் சோ்ந்து கொலைமிரட்டல் விடுத்தனா். இதுதொடா்பாக, வரதம்மாளின் மகன் இளங்கோ அளித்த புகாரின் பேரில், ம.ரெட்டியபட்டி காவல்துறையினா் முருகன், பொன்னுத்தாய் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.