சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரி சாா்பில் சனிக்கிழமை எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்தசோகை விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் தீபிகாஸ்ரீ தலைமை வகித்தாா். மருத்துவா் கவிதாராணி, ரத்தசோகை ஏற்பட்டுவிட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசினாா். பின்னா், கல்லூரி மாணவிகளின் விழிப்புணா்வு நாடகம் நடைபெற்றது. முடிவில் சங்கா் நன்றி கூறினாா்.