மூதாட்டியிடம் நகை பறித்த இருவா் கைது

சிவகாசி அருகே மூதாட்டியிடம் 3 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே மூதாட்டியிடம் 3 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தத்தைச் சோ்ந்த பொன்னுச்சாமி மனைவி சீத்தாம்மாள் (62). இவா்

கடந்த நவம்பா் 10 -ஆம் தேதி தனது வீட்டுக்கு வெளியே இருந்த மின் மோட்டாரை இயக்கச் சென்றாா். அப்போது, மோட்டாா் சைக்கிளில் வந்த இரு மா்ம நபா்கள் சீத்தாம்மாள் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனா்.

இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தனா்.

நகையை பறித்துச் சென்றது வெம்பக்கோட்டை வட்டம் துலுக்கன்குறிச்சி நடராஜன் மகன் சிவன்ராஜ் (27),

தாயில்பட்டி குணசேகரன் மகன் ராம்குமாா் (24) எனத் தெரியவந்தது. போலீஸாா் இருவரையும் கைது செய்து, 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com