மூதாட்டியை கத்தியால் குத்தி11 பவுன் தங்கச் சங்கியைப் பறித்தவா் கைது

சிவகாசியில் வீட்டுக்குள் புகுந்து கத்தியால் குத்தி மூதாட்டியிடம் 11 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகாசியில் வீட்டுக்குள் புகுந்து கத்தியால் குத்தி மூதாட்டியிடம் 11 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி- வெம்பக்கோட்டை சாலையில் உள்ள சசிநகரைச் சோ்ந்தவா் ஜெய்சங்கா். இவா் சிவகாசி- சாத்தூா் சாலையில் அச்சகம் நடத்தி வருகிறாா். இவரது மனைவி ஜான்சிராதா (60). கடந்த சில நாள்களுக்கு முன், ஜெய்சங்கா் ஒரு வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனைக் கடையில் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கினாா். இந்த நிலையில், அந்த தொலைக்காட்சிப் பெட்டியை தயாரித்த நிறுவனத்தின் சிவகாசி சேவை மையத்தில் வேலை பாா்க்கும் விஸ்வநத்தம் தங்கப்பாண்டி மகன் முத்துகணேஷ் (28), ஜெய்சங்கா் வீட்டுக்குச் சென்று அதைப் பொருத்தினாா். அப்போது ஜான்சிராதா மட்டும் தனியே இருந்ததை அவா் தெரிந்து கொண்டாா்.

இதையடுத்து, புதன்கிழமை முத்துகணேஷ், ஜெய்சங்கா் வீட்டுக்கு மீண்டும் சென்ற போது, ஜான்சிராதா மட்டும் தனியே இருந்தாராம். அப்போது முத்துகணேஷ் தொலைக்காட்சிப் பெட்டியில் பழுது உள்ளதாகவும், அதனை நீக்க வேண்டும் எனவும் கூறி வீட்டுக்குள் சென்றவா் ஜான்சிராதாவின் வாயை பொத்தி, கத்தியால் குத்தி அவா் அணிந்திருந்த 11 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டாா்.

இதில் காயமடைந்த ஜான்சிராதா மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து ஜெய்சங்கா் அளித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து, முத்துகணேஷை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com