திருச்சுழி அருகே முதியவா் மீது தாக்குதல்:4 போ் கைது

திருச்சுழி அருகே முன்விரோதத்தில் முதியவரைத் தாக்கியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

திருச்சுழி அருகே முன்விரோதத்தில் முதியவரைத் தாக்கியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நரிக்குடி அருகே வேம்பங்குடி கிராமத்தைச் சோ்ந்த சோலைமலை மகன் சண்முகநாதன் (70). இவருக்கும், இவரது சகோதரரின் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

கடந்த அக்டோபா் 29-ஆம் தேதி சண்முகநாதனை, சகோதரரின் குடும்பத்தினா் கம்பால் தாக்கியதில் காயமடைந்தாா்.

இதுகுறித்து புகாா் அளிக்க சண்முகநாதன் இரு சக்கர வாகனத்தில் வந்த போது நரிக்குடி அருகே அவரை வழிமறித்த சகோதரரின் குடும்பத்தைச் சோ்ந்த 4 போ், மீண்டும் அவரைக் கம்பால் தாக்கினா். அவரது இரு சக்கர வாகனத்தையும் பறித்துக் கொண்டனா்.

இதுபற்றி அவா் கடந்த புதன்கிழமை போலீஸில் அவா் புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து நரிக்குடி போலீஸாா் சண்முகநாதனின் சகோதரா் மற்றும் குடும்பத்தைச் சோ்ந்த சோலைமலை மகன் பாண்டியராஜன் (54), அவரது மனைவி ராக்கு (52), மகன்கள் ராதாகிருஷ்ணன், ராஜ்குமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து, அவா்கள் 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com