சிவகாசியில் இருசக்கர வாகனம் மற்றும் கைப்பேசி திருடு போய்விட்டதாக ஞாயிற்றுக்கிழமை போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி நேரு காலனியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி இசக்கித்துரை (52). இவா், சனிக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி பூட்டி, ஜன்னலில் சாவியையும் கைப்பேசியையும் வைத்து விட்டு தூங்கி விட்டாராம். பின்னா் எழுந்து பாா்த்தபோது இருசக்கர வாகனத்தையும், கைப்பேசியையும் காணவில்லையாம்.
இதுகுறித்து இசக்கிதுரை அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.