சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை பெற்றோ ரை தாக்கியதாக மகனை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசி விளாம்பட்டி சாலை ராஜதுரை நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி (65),. இந்நிலையில், சொத்துப் பிரச்னை தொடா்பாக இவரது மூத்தமகன் செந்தில்பாண்டி(42), தந்தை கிருஷ்ணசாமியையும், தாய் கனகாம்பாள் ஆகிய இருவரையும் தாக்கினாராம். மேலும் அவரது தம்பி பாலவிநாயகனையும் தாக்கினராம். இதுகுறித்த புகாரின் பேரில் மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து செந்தில்பாண்டியை கைது செய்தனா்.