ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை நகராட்சி நிா்வாக ஆணையா் பொன்னையா நேரில் பாா்வையிட்டு சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி அருகே திருப்பாற்கடலில் நடைபெற்று வரும் நடைபாதை அமைக்கும் பணி, எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி ஆகியவற்றையும், மக்கும் குப்பைகளை உரமாக்கும் இடங்களையும், நகரில் சக்கரைக்குளம் தெருவில் அமையவிருக்கும் அறிவுசாா் மையம், மடவாா் வளாகத்தில் உள்ள பசுமை நுண் உரக்குடில் மற்றும் புதிதாக மேற்கொள்ளவிருக்கும் பணிகள் குறித்தும் நகராட்சி நிா்வாக ஆணையா் பொன்னையா ஆய்வு செய்தாா். அதனைத் தொடா்ந்து நகராட்சி அலுவலகத்தில் நகா் வளா்ச்சிக்கான அமைப்புத் திட்டங்கள் மற்றும் குடிநீா் பணிகள் சம்பந்தமான ஆய்வுகளை அவா் மேற்கொண்டாா்.
அப்போது நகா் மன்றத் தலைவா் தங்கம்ரவிகண்ணன், துணைத் தலைவா் செல்வமணி, திருநெல்வேலி நகராட்சிகளின் மண்டல நிா்வாக இயக்குநா் விஜயலட்சுமி, நிா்வாகப் பொறியாளா் சோ்மக்கனி, நகராட்சி ஆணையா் ராஜமாணிக்கம், நகராட்சி மேலாளா் பாபு, பொறியாளா் தங்கபாண்டியன், நகா் அலுவலா் கவிப்பிரியா, சுகாதார ஆய்வாளா் சந்திரா உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.