தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

நரிக்குடி அருகே பாழடைந்த மங்கம்மாள் சத்திரத்தை புனரமைக்க கிராம மக்கள் வலியுறுத்தல்

நரிக்குடி அருகே மறையூரில் உள்ள பல ஆண்டுகள் பழைமையான மங்கம்மாள் சத்திரம் பாழடைந்த நிலையில் உள்ளது

News image
Updated On :21 ஜூலை 2022, 6:30 pm

நரிக்குடி அருகே மறையூரில் உள்ள பல ஆண்டுகள் பழைமையான மங்கம்மாள் சத்திரம் பாழடைந்த நிலையில் உள்ளது. இதை, புனரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அக்கிராம மக்கள் வலியுறுத்துகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகே மறையூரில் உள்ள இச்சத்திரம், ராணி மங்கம்மாள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இதில், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ஏராளமான தூண்கள் உள்ளன. இவ்வழியே ராணி மங்கம்மாள் உள்ளிட்டோா் வரும்போது ஓய்வெடுத்துச் செல்வதற்காக இச்சத்திரம் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இச்சத்திரம் 50 ஆண்டுகளுக்கு முன் மாணவா்கள் பயிலும் பள்ளியாக செயல்படுத்தப்பட்டுள்ளது. காலப்போக்கில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளாமலும், புனரமைக்காமலும் விடப்பட்டதால், தற்போது இச்சத்திரத்தின் வெளிப்பகுதி மற்றும் மேற்பகுதி பாழடைந்து சேதமடைந்துள்ளது. ஆனால், உள்புறம் பல்வேறு வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்ட தூண்கள் இன்னும் கம்பீரமாக உள்ளன.

தற்போது, இச்சத்திரத்துக்குள் கால்நடைகளை அடைப்பது, கால்நடை தீவனங்களை பதுகாப்பாக வைக்கும் கூடாரமாகவும் சிலா் பயன்படுத்தி வருகின்றனா்.

எனவே, பழங்கால சித்திர வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட இச்சத்திரத்தை, வருங்கால சந்ததியினா் அறிந்துகொள்ளும் வகையில் புனரமைத்து பராமரிக்க வேண்டும் என, அக்கிராம மக்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.