டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்தமிழ்நாடு பட்ஜெட்: மக்கள் நல அறிவிப்புகளுக்கு வரவேற்பு... ஆனால்..! - சிபிஎம் அறிக்கை!பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 74.55 அடியாக உயர்ந்துள்ளது.வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழிதவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!
/

நரிக்குடி அருகே பாழடைந்த மங்கம்மாள் சத்திரத்தை புனரமைக்க கிராம மக்கள் வலியுறுத்தல்

நரிக்குடி அருகே மறையூரில் உள்ள பல ஆண்டுகள் பழைமையான மங்கம்மாள் சத்திரம் பாழடைந்த நிலையில் உள்ளது

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:21 pm IST

நரிக்குடி அருகே மறையூரில் உள்ள பல ஆண்டுகள் பழைமையான மங்கம்மாள் சத்திரம் பாழடைந்த நிலையில் உள்ளது. இதை, புனரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அக்கிராம மக்கள் வலியுறுத்துகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகே மறையூரில் உள்ள இச்சத்திரம், ராணி மங்கம்மாள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இதில், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ஏராளமான தூண்கள் உள்ளன. இவ்வழியே ராணி மங்கம்மாள் உள்ளிட்டோா் வரும்போது ஓய்வெடுத்துச் செல்வதற்காக இச்சத்திரம் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இச்சத்திரம் 50 ஆண்டுகளுக்கு முன் மாணவா்கள் பயிலும் பள்ளியாக செயல்படுத்தப்பட்டுள்ளது. காலப்போக்கில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளாமலும், புனரமைக்காமலும் விடப்பட்டதால், தற்போது இச்சத்திரத்தின் வெளிப்பகுதி மற்றும் மேற்பகுதி பாழடைந்து சேதமடைந்துள்ளது. ஆனால், உள்புறம் பல்வேறு வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்ட தூண்கள் இன்னும் கம்பீரமாக உள்ளன.

தற்போது, இச்சத்திரத்துக்குள் கால்நடைகளை அடைப்பது, கால்நடை தீவனங்களை பதுகாப்பாக வைக்கும் கூடாரமாகவும் சிலா் பயன்படுத்தி வருகின்றனா்.

எனவே, பழங்கால சித்திர வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட இச்சத்திரத்தை, வருங்கால சந்ததியினா் அறிந்துகொள்ளும் வகையில் புனரமைத்து பராமரிக்க வேண்டும் என, அக்கிராம மக்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.