ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
ஆண்டு தோறும் வரும் ஆடி மாதம் பூர நட்சத்திரம் ஆண்டாள் பிறந்த தினமாகும். அன்றைய தினம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோயில் வளாகத்திலேயே நடைபெற்ற தேரோட்டம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
இந்த ஆண்டுக்குரிய ஆடிப்பூரம் வருகிற ஆகஸ்ட் 1 தேதி வருகிறது. அன்றைய தினம் ஆண்டாள் கோயில் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்கான விழா நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி இன்று காலை ஆண்டாள் ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் ஆண்டாள் ரங்க மன்னார் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரம் மலர்களாலும் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டது. காலையில் கொடி பட்டம் மாடவீதி 4 ரத வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க கொண்டுவரப்பட்டது. பின்னர் கொடி மரத்தின் அருகே கொடி பட்டத்திற்கும் கொடி மரத்திற்கும் சிறப்பு பூஜைகள நடைபெற்றன. தொடர்ந்து கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தபடி 9 மணி முதல் 10 மணிக்குள் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையும் படிக்க- துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பித்த நடிகர்!
கொடியை ஆண்டாள் கோயில் அர்ச்சகர் பாலாஜி கொடியேற்றினார். ஞாயிற்றுக்கிழமை முதல் தேரோட்டம் வரை தினமும் ஆண்டாள் ரங்க மன்னர் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி காட்சியளித்து அருள் பாளிக்க உள்ளனர். தேரோட்டம் நிகழ்ச்சிகள் கொடியேற்றத்துடன் தொடங்கியதால் ஆண்டாள் கோயில் அமைந்துள்ள பகுதி மற்றும் முக்கிய பகுதிகளில் விழாக்கோலம் பூண்டுள்ளது.

கொடியேற்றத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமின்றி விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் செயல் அலுவலர் முத்துராஜா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் நகர் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்ட நிகழ்ச்சிகள் கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வி.பி. சிங்: வரலாறு நினைவுகொள்ள வேண்டிய ஓர் இந்தியப் பிரதமர்

சிலிண்டர் முதல் ஆதார் வரை..! ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்!

சிக்க வைத்த 238 மணி நேர போன் பேச்சு, சிசிடிவி காட்சி! புணே கொலையில் காதலனுடன் சிக்கிய இளம்பெண்ணின் சூப்பர் பிளான்!
என்எல்சி பங்கு விற்பனை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
விடியோக்கள்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP



