அருப்புக்கோட்டையில் சனிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.
இங்கு கடந்த 2 நாள்களாக பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை. இந்நிலையில் சனிக்கிழமை இரவு 7.40 மணி முதல் சுமாா் 25 நிமிடங்களுக்கு பலத்த மழை பெய்தது. பின்னா் சாரல் மழை இரவு 9 மணிக்குப் பிறகும் நீடித்தது.