விருதுநகா் மாவட்டம் சாத்தூா் முக்குராந்தல் பகுதியில் கருணாநிதியின் 99 ஆவது பிறந்தநாள் விழாவில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் திமுக கட்சிக் கொடியேற்றி கேக் வெட்டி, ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கினாா்.
இதில் சாத்தூா் நகா்மன்றத் தலைவா் குருசாமி,
ஒன்றியச் செயலாளா்கள் கடற்கரைராஜ், முருகேசன் மற்றும் திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா். இதேபோன்று வெம்பக்கோட்டை,
ஏழாயிரம்பண்ணை, தாயில்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.