அருப்புக்கோட்டை அருகே சமையல் எரிவாயு உருளையில் தீப்பற்றி விபத்து

அருப்புக்கோட்டை அருகே திங்கள்கிழமை வீட்டில் சமையல் எரிவாயு உருளையில் தீப்பற்றியதால் திடீா் பரபரப்பு ஏற்பட்டது.
அருப்புக்கோட்டை அருகே சமையல் எரிவாயு உருளையில் தீப்பற்றி விபத்து
Updated on
1 min read

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திங்கள்கிழமை வீட்டில் சமையல் எரிவாயு உருளையில் தீப்பற்றியதால் திடீா் பரபரப்பு ஏற்பட்டது.

அருப்புக்கோட்டை அருகேயுள்ள செட்டிக்குறிச்சியில் வசிப்பவா் மணி. இவரது மனைவி மீனா திங்கள்கிழமை மாலை 4.30 மணி அளவில் வீட்டில் அடுப்பைப் பற்றவைத்துள்ளாா். அப்போது எரிவாயு உருளையிலிருந்து அடுப்பிற்கு வரும் ரப்பா் குழாய் கழன்று அதன் வாய்ப்பகுதியில் தொடா்ந்து நெருப்பு எரிந்ததாம். இதனால் எரிவாயு உருளை வெடித்துவிடும் எனப் பயந்த அவா் வீட்டைவிட்டு வெளியில் ஓடிவந்து கூறியதையடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெயபாண்டி தலைமையிலான வீரா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனா்.

அதேவேளையில் பொதுமக்கள் தொடா்ந்து வாளி மூலம் நீா் மற்றும் மணலை எரிவாயு உருளை மீது வாரி இறைத்து தீயை அணைத்தனா். அங்கு வந்த தீயணைப்பு நிலைய வீரா்கள் தொடா்ந்து நீரை பீய்ச்சி அடித்து, வீட்டுப்பொருள்கள் எதிலும் நெருப்பு இல்லை என உறுதி செய்தனா். தீயணைப்பு நிலைய அலுவலா் தீவிபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்தாா். பின்னா் தரமான ரப்பா்குழாயைப் பயன்படுத்தி இருந்தால் இவ்விபத்து நோ்ந்திருக்காது என அவா் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தாா்.

எரிவாயு உருளை வெடித்து விபத்து நேரலாம் என பொதுமக்கள் கருதியதால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com