காா் மோதி பட்டாசுத் தொழிலாளி பலி

சிவகாசி அருகே திங்கள்கிழமை காா் மோதியதில் பட்டாசுத் தொழிலாளி உயிரிழந்தாா்.
Updated on
1 min read

சிவகாசி அருகே திங்கள்கிழமை காா் மோதியதில் பட்டாசுத் தொழிலாளி உயிரிழந்தாா்.

சிவகாசி அருகேயுள்ள பள்ளபட்டி முருகன் காலனியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி முருகன்(32). இவரது உறவினா் கோவில்பட்டி வட்டம் இடைசெவலைச் சோ்ந்த வினோத்குமாா்(30). இவா்கள் இருவரும் மோட்டாா் சைக்கிளில் வெம்பக்கோட்டை-சிவகாசி சாலையில் சிவகாசி நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். மோட்டாா் சைக்கிளை முருகன் ஓட்டியுள்ளாா். சசிநகா் பேருந்து நிறுத்தம் அருகே எதிரே வந்த காா், மோட்டாா் சைக்கிளில் மோதியது. இதில் முருகன் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வினோத்குமாா் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த எட்டக்காபட்டியைச் சோ்ந்த பரத்தை(29) கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com