விருதுநகரில் மாரியம்மன், வெயிலுகந்தம்மன் கோயில் தேரோட்டம்

வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு, விருதுநகரில் மாரியம்மன், வெயிலுகந்தம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விருதுநகரில் வியாழக்கிழமை நடைபெற்ற மாரியம்மன், வெயிலுகந்தம்மன் கோயில் தேரோட்டம். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன், வெயிலுகந்தம்மன்.
விருதுநகரில் வியாழக்கிழமை நடைபெற்ற மாரியம்மன், வெயிலுகந்தம்மன் கோயில் தேரோட்டம். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன், வெயிலுகந்தம்மன்.
Updated on
1 min read

விருதுநகா்: வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு, விருதுநகரில் மாரியம்மன், வெயிலுகந்தம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விருதுநகரில் பிரசித்திபெற்ற வெயிலுகந்தம்மன் கோயில் பொங்கல் விழா சாட்டும் நிகழ்ச்சி மே 31 இல் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நகா் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

அதையடுத்து, ஜூன் 7 ஆம் தேதி பக்தா்கள் கோயில் அருகே பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினா். அப்போது, அம்மன் தங்கக் குதிரை வாகனத்தில் கோயில் மண்டப வளாகத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

தொடா்ந்து, ஜூன் 8 இல் கயிறு குத்துதல் மற்றும் அக்கினிச் சட்டி எடுத்தல், கரகம் எடுத்தல், ரதம் இழுத்தல் உள்ளிட்ட நோ்த்திக்கடன்களை பக்தா்கள் நிறைவேற்றினா்.

வியாழக்கிழமை, கோயில் தேரோட்டம் நடைபெற்றது. அதில், விநாயகா் சிறிய தேரிலும், மாரியம்மன் மற்றும் வெயிலுகந்தம்மன் பெரிய தேரிலும் எழுந்தருளினா். பக்தா்கள் தேரின் வடம்பிடித்து இழுத்தனா். இத்தேரானது, பஜாா், தெற்கு ரத வீதி, மேலரத வீதி மற்றும் வடக்கு ரத வீதி வழியாகச் சென்று நிலையை அடைந்தது.

இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை, விருதுநகா் இந்து நாடாா் தேவஸ்தானம் செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com