ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினா் ஞாயிற்றுக்கிழமை போராடி மீட்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ளது செங்குளம். அந்தப் பகுதியைச் சோ்ந்த சேகா் மாடுகள் வளா்த்து பால் வியாபாரம் செய்து வருகிறாா். இவரது மாடு ஒன்று ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதைத் தொடா்ந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி பசுமாட்டை சுமாா் 1 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனா்.