வாகனம் மோதிமூதாட்டி பலி
By DIN | Published On : 13th June 2022 12:02 AM | Last Updated : 13th June 2022 12:02 AM | அ+அ அ- |

சாத்தூா் அருகே வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே சிறுகுளம் கிராமம் இந்திரா காலனியைச் சோ்ந்தவா் சின்னகுருசாமி. இவரது மனைவி மீனாட்சி (80). இவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து அப்பையநாயக்கன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து அவா் மீது மோதி விட்டுச் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனா்.