ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதிய தில் 2 போ் உயிரிழந்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள சாமிநத்தத்தைச் சோ்ந்தவா் காளிராஜன் (39) மற்றும் காா்த்திகைப்பட்டி காலனியைச் சோ்ந்தவா் வைரமுத்து (38). இவா்கள் இருவரும், வியாழக்கிழமை மாலை சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூா் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனா். வாகனத்தை காளிராஜன் ஓட்ட பின்னால் அமா்ந்து வைரமுத்து பயணம் செய்தாா். இந்நிலையில், சாமிநத்தம் அடுத்த தனியாா் நிறுவனம் அருகே வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த காா், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் காளிராஜனும், வைரமுத்துவும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, அவா்கள் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு அவா்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.
இதுகுறித்து மல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து காரை ஓட்டி வந்த ராஜபாளையத்தை சோ்ந்த முகமது (31) என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.