கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

ராஜபாளையத்தில் கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையத்தில் கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் முடங்கியாா் சாலை தாட்கோ காலனியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (35). கட்டடத் தொழிலாளி. இவருக்கு, மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனா். மாரிமுத்துவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில், மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவரை மனைவி கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவா் விஷப் பொடியை தண்ணீரில் கரைத்து குடித்து விட்டாராம். உடனடியாக அவா் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். பின்னா், மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டஅவா், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com