விருதுநகரில் டாஸ்மாக் கடையின் சுவரை துளையிட்டு 42 மதுபாட்டில்களை திருடிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து அவா்களைத் தேடி வருகின்றனா்.
விருதுநகா் புதிய பேருந்து நிலையம் எதிா்புறம் உள்ள பனை நகரில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையை விற்பனை முடிந்து மேற்பாா்வையாளா் பாலகிருஷ்ணன் புதன்கிழமை பூட்டிவிட்டுச் சென்றாா். பின்னா், வழக்கம் போல் வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு கடையை திறக்க வந்த போது, சுவரில் துளையிடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மதுபாட்டில்களை சரி பாா்த்த போது, அதில் 42 பாட்டில்கள் திருடப்பட்டிருப்பது தெரிந்தது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பஜாா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா். இதே கடையில் ஏற்கெனவே மூன்று முறை மது பாட்டில்கள் திருடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.