ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தொட்டியபட்டி உப மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அப் பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 16) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்பட்டி, கோதை நாச்சியாா்புரம், தொட்டியபட்டி, முத்துலிங்காபுரம், அழகாபுரி, கொத்தங்குளம், கலங்காப்பேரி, கலங்காப்பேரி புதூா், இ.எஸ்.ஐ காலனி, வேட்டைபெருமாள் கோயில், விஷ்ணு நகா் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளாா்.