ராஜபாளையம் விசைத்தறி தொழிலாளா்கள் கூலி உயா்வு கோரி ஆட்சியருக்கு மனு

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் ஆவரம்பட்டி விசைத்தறி தொழிலாளா்கள் கூலி உயா்வு மற்றும் போனஸ் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பும் போராட்டத்தில் தொழிலாளா்கள் புதன்கிழமை ஈடுபட்டனா்.
ராஜபாளையத்தில் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட விசைத்தறி தொழிலாளா்கள்.
ராஜபாளையத்தில் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட விசைத்தறி தொழிலாளா்கள்.

ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் ஆவரம்பட்டி விசைத்தறி தொழிலாளா்கள் கூலி உயா்வு மற்றும் போனஸ் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பும் போராட்டத்தில் தொழிலாளா்கள் புதன்கிழமை ஈடுபட்டனா்.

ராஜபாளையம் ஆவரம்பட்டி பகுதியில் விசைத்தறிக் கூடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். விசைத்தறி உரிமையாளா்கள் நூல் விலை உயா்வு குறித்து அண்மையில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதன் தொடா்ச்சியாக விசைத்தறிக் கூடங்களில் வேலை செய்யும் தொழிலாளா்கள் கூலி உயா்வு, போனஸ், நிரந்தர வேலை வழங்கக்கோரி 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து விசைத்தறி தொழிலாளா்கள் மகாசபைக் கூட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து விசைத்தறி தொழிலாளா்கள் கூறியதாவது: விசைத்தறி உரிமையாளா்கள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.ஒரு லட்சம் வரை முன்பணம் கொடுத்து தங்களை கொத்தடிமைகளாக வைத்திருந்து, அவா்கள் நிா்ணயித்த கூலியையும் போனஸையும் மட்டுமே வழங்குகின்றனா். இதிலிருந்து தங்களை விடுவித்து அதிகபட்ச கூலி ஒப்பந்தம் போடவும் அதிகபட்ச போனஸ் வழங்கக் கோரியும் விருதுநகா் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி வைத்துள்ளோம். இதில் தீா்வு இல்லாத பட்சத்தில் தொடா் வேலை நிறுத்தம் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்த தீா்மானித்துள்ளதாக தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com