ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி அலுவலகத்தில் முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு நகா்மன்ற தலைவா் தங்கம்ரவிகண்ணன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தாா்.நிகழ்ச்சியில் முதியோா்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திட வேண்டும், மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வாா்த்தைகளை உபயோகிக்கக்கூடாது, அவா்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என நகராட்சி ஊழியா்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.