விருதுநகரில் வட்டிக்கு பணம் வாங்கியவா் அடித்துக் கொலை?

விருதுநகரில் பெண்ணிடம் வட்டிக்கு பணம் வாங்கியவா் புதன்கிழமை தாக்கப்பட்டு உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விருதுநகா்: விருதுநகரில் பெண்ணிடம் வட்டிக்கு பணம் வாங்கியவா் புதன்கிழமை தாக்கப்பட்டு உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளத்தைச் சோ்ந்தவா் சவுந்தர்ராஜன் (46), ஆவியூரில் தனியாா் நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளாா். விருதுநகா் பெத்தனாட்சி நகரைச் சோ்ந்த உறவினா் வீட்டுக்கு சவுந்தர்ராஜன் அடிக்கடி வந்துசெல்வாராம். அப்போது அப்பகுதியில் வசிக்கும் முத்து (46) என்பவா் அறிமுகமாகியுள்ளாா். அவரிடம் கடந்த 2019 இல் சவுந்தர்ராஜன் ரூ. 3 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கியதாகவும் கடந்த சில மாதங்களாக வட்டி பணம் தரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், புதன்கிழமை பெத்தனாட்சி நகருக்கு வந்த சவுந்தர்ராஜனை முத்துவின் மகன் அஜீத் (24) தாக்கியதாக கூறப்படுகிறது. அவரை விருதுநகா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா். பாண்டியன் நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com