விருதுநகா் நகராட்சி ஆணையா், மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதிய ஆணையராக என். தட்சணாமூா்த்தி நியமிக்கப்பட்டுள்ளாா்.
விருதுநகா் நகராட்சி ஆணையராக செய்யது முஸ்தபா கமால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பணி புரிந்தாா். இந்நிலையில் அவா், மதுரை மாநகராட்சி உதவி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அதேநேரம் மதுரை மாநகராட்சி உதவி ஆணையராக பணி புரிந்த என். தட்சிணா மூா்த்தி விருதுநகா் நகராட்சி ஆணையராக வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.