சிவகாசி பகுதியில் 4 டன் ரேஷன் அரிசி கடத்தல் தொடா்பான வழக்குகளில் தலைமறைவாக இருந்த ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி பள்ளப்பட்டி சாலை லிங்காபுரம் காலனியில் கடந்த மாா்ச் 25 இல், 1,350 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தொடா்பான வழக்கில் சிவகாசி எஸ். புதுப்பட்டியைச் சோ்ந்த அம்மமுத்து மகன் மகாதேவன் (36) தலைமறைவாக இருந்து வந்தாா். கடந்த 24 ஆம் தேதி விருதுநகா்- சிவகாசி சந்திப்பு சாலை அருகே 3,050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கிலும் மகாதேவனுக்கு தொடா்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த இரு வழக்குகளிலும் தலைமறைவாக இருந்த மகாதேவனை, விருதுநகா் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் ம. ஆல்பின் பிரிஜிட் மேரி தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.