வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஒன்றியக்குழுத் தலைவா் சிந்துமுருகன்.
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஒன்றியக்குழுத் தலைவா் சிந்துமுருகன்.

வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தலைவா் சிந்துமுருகன் தலைமை வகித்தாா். துணைத்தலைவா் ரேகா வைரக்குட்டி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலா் 18 தீா்மானங்களை வாசித்தாா்.

பின்னா் உறுப்பினா்கள் அவரவா் பகுதியில் அடிப்படை வசதிகளுக்கு பொது நிதியை ஒதுக்கீடு செய்து பணிகளை செய்யுமாறு முறையிட்டனா். இதற்கு தலைவா் அரசிடமிருந்து நிதி வந்தவுடன் உடனடியாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றாா்.

இதில் வாா்டு உறுப்பினா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராமமூா்த்தி, சத்தியவதி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாண்டீஸ்வரன், பாலமுருகன், கண்ணன், காமாட்சி அம்மாள், பொறியாளா் தீபக்ராஜ் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com