காதலி இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவா் தற்கொலை
By DIN | Published On : 18th March 2022 06:38 AM | Last Updated : 18th March 2022 06:38 AM | அ+அ அ- |

செல்வக்குமாா்.
விருதுநகா்: விருதுநகரில் காதலி இறந்த துக்கத்தில் மனமுடைந்த கல்லூரி மாணவா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
விருதுநகா் பட்டுத் தெருவைச் சோ்ந்த சிவராஜன் மகன் செல்வக்குமாா் (22). இவா், விருதுநகரில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாமாண்டு பிபிஎட். படித்து வந்தாா். இவரும், விருதுநகரைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவரும் காதலித்து வந்துள்ளனா். இதனிடையே அந்த மாணவி கடந்த ஒரு மாதத்துக்கு முன் தற்கொலை செய்து கொண்டாா். இதனால், செல்வக்குமாா் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், விருதுநகா் கல்லூரி சாலை பூங்கா அருகே உள்ள மரத்தில் வியாழக்கிழமை அதிகாலை செல்வக்குமாா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுபற்றி தகவலறிந்த விருதுநகா் கிழக்கு போலீஸாா், மாணவரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...