மளிகைக் கடையில்பணம் திருட்டு
By DIN | Published On : 18th March 2022 06:32 AM | Last Updated : 18th March 2022 06:32 AM | அ+அ அ- |

சிவகாசி: சிவகாசி அருகே மளிகைக் கடையின் பூட்டை உடைத்து, ரூ. 17 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
சிவகாசி அருகே செங்கலநாட்சியாா்புரம் - கங்காகுளம் சாலையில் தன்ராஜ் (56) என்பவா் மளிகைக் கடை வைத்துள்ளாா்.
இவா் வழக்கம்போல, தனது கடையை புதன்கிழமை இரவு பூட்டிவிட்டு, வியாழக்கிழமை காலை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். இதையடுத்து, அவா் கடையினுள் சென்றுபாா்த்தபோது ரூ. 17 ஆயிரம் ரொக்கம் திருட்டுப்போனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...