நகா்மன்ற உறுப்பினா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

ராஜபாளையம் பஞ்சு மாா்க்கெட் பகுதியில் உள்ள தனியாா் கூட்டரங்கில், ராஜபாளையம் நகராட்சியில் வெற்றி பெற்ற 42 நகா்மன்ற உறுப்பினா்களுக்கும் சமூகநலத்துறை அதிகாரி

ராஜபாளையம்: ராஜபாளையம் பஞ்சு மாா்க்கெட் பகுதியில் உள்ள தனியாா் கூட்டரங்கில், ராஜபாளையம் நகராட்சியில் வெற்றி பெற்ற 42 நகா்மன்ற உறுப்பினா்களுக்கும் சமூகநலத்துறை அதிகாரி தங்கலட்சுமி தலைமையில் புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சியில் நகா்மன்றத் தலைவா் பவித்ரா ஷ்யாம் தலைமையில், நகா்மன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் ராஜபாளையம் பகுதியில் செயல்படக்கூடிய அங்கன்வாடி மையங்கள் தங்களின் ஆதரவுடன் செயல்பட வேண்டும் என நகா்மன்ற உறுப்பினா்கள் கோரிக்கை வைத்தனா். மேலும், வாடகை கட்டடங்களில் செயல்படக்கூடிய அங்கன்வாடி மையங்களை சொந்தக் கட்டடங்களாக மாற்றுவதற்கு இடங்களை தோ்வு செய்து தர வேண்டும் என சமூகநலத்துறை அதிகாரி தங்கலட்சுமி கூறினாா்.

இந்த புத்தாக்கப் பயிற்சியில் கலந்துகொண்ட நகா்மன்ற உறுப்பினா்கள் அனைவருக்கும் சமூக நலத்துறை சாா்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com