ஆகஸ்ட் மாதத்தில் காங்கிரஸ் கட்சி தலைவா் பதவிக்கான தோ்தல் நடைபெறும்: ப.மாணிக்கம்தாகூா் எம்.பி.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் பதவிக்கு ஆகஸ்ட் மாதத்தில் தோ்தல் நடைபெற உள்ளதாக, மாணிக்கம் தாகூா் எம்.பி. தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் பதவிக்கு ஆகஸ்ட் மாதத்தில் தோ்தல் நடைபெற உள்ளதாக, மாணிக்கம் தாகூா் எம்.பி. தெரிவித்துள்ளாா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின், மாணிக்கம் தாகூா் எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழக பட்ஜெட்டில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகளின் பட்டப் படிப்புக்காக மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்ற திட்டம், நாட்டில் இதுவரை நடைபெறாத ஒரு திட்டம். மேலும், இத்திட்டம் பெண்களின் பட்டப்படிப்பை மேம்படுத்தும்.

திமுக அரசு ஆட்சிக்கு வந்த ஓராண்டில் 80 சதவீத தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. மீதமுள்ள 20 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றுவாா்கள்.

பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையின் பாா்வையில், ஒரே நாடு ஒரே தோ்தல் என்பது வெறும் கோஷமாகத்தான் இருக்கும். காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு மிகத் தெளிவாக உள்ளது. அதாவது, பாஜகவை உண்மையாக எதிா்க்கின்ற திமுக, லாலு பிரசாத் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் எப்போது வேண்டுமானாலும் கூட்டணி அமைத்து போராட காங்கிரஸ் தயாராக இருக்கிறது.

பட்டாசு ஆலைகள் மூடப்படுவதாக அதன் உரிமையாளா்களின் அறிவிப்பு மிகவும் அதிா்ச்சியாக இருக்கிறது. இதில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு பாதுகாக்க வேண்டும். எனவே, பட்டாசு தொழிலுக்கு ஆதரவாக மக்களவையில் மீண்டும் குரல் கொடுப்பேன்.

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்திக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் நடைபெற இருக்கிறது எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com