

விருதுநகா் மாவட்ட இந்திய தேசிய லீக் கட்சியின் சாா்பில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை இலவச வேஷ்டி, சேலை வழங்கப்பட்டது.
சிவகாசி கண்ணகி காலனியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் சிவகாசி நகரத் தலைவா் முகமதுகான் தலைமை வகித்தாா். மாவட்ட வழக்குரைஞா் பிரிவு செயலா் சந்திரசேகரன் 62 ஏழை எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி, சேலையை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், கட்சியின் மாநிலச் செயலா் இ. செய்யது ஜஹாங்கீா், மாவட்ட வா்த்தகப் பிரிவு செயலா் மீரான் மைதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.