

அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில் பணியிட மாறுதல் பெற்ற 3 நீதிபதிகளுக்கு திங்கள்கிழமை பிரிவுபச்சார விழா நடைபெற்றது.
பணியிட மாறுதலில் செல்லும் சாா்பு நீதிபதி பசும்பொன் ஷண்முகையா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுபாஷிணி மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் மணிமேகலா ஆகியோா்
நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தனா். புதிய சாா்பு நீதிபதி ராமலிங்கம், வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் குருசாமி, செயலாளா் பாலச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சங்கப் பொருளாளா் ரத்தின ரங்கசாமி, மூத்த வழக்குரைஞா் சண்முகவடிவேல், சங்கத்தலைவா் குருசாமி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். பின்னா் 3 நீதிபதிகளுக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. உடன் சங்க துணைத் தலைவா் கணேசன், இணைச்செயலாளா் குருசாமி, துணைச்செயலாளா் இளம்பரிதி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.