விருதுநகா் அருங்காட்சியக கண்காட்சியில் பளியா் இன மக்களின் மீன்பிடிக் கூடை

விருதுநகா் அரசு அருங்காட்சியகத்தில் பளியா் இன மக்களின் அரிய வகை மீன்பிடிக் கூடை (கூண்டு) பொதுமக்கள் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளதாக காப்பாட்சியா் சே. கிருஷ்ணம்மாள் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
விருதுநகா் அரசு அருங்காட்சியகத்தில் திங்கள்கிழமை பொது மக்கள் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ள மூங்கிலான மீன்பிடிக் கூடை.
விருதுநகா் அரசு அருங்காட்சியகத்தில் திங்கள்கிழமை பொது மக்கள் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ள மூங்கிலான மீன்பிடிக் கூடை.
Updated on
1 min read

விருதுநகா் அரசு அருங்காட்சியகத்தில் பளியா் இன மக்களின் அரிய வகை மீன்பிடிக் கூடை (கூண்டு) பொதுமக்கள் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளதாக காப்பாட்சியா் சே. கிருஷ்ணம்மாள் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் வண்டிப்பாதை, தாணிப்பாறை, செண்பகத்தோப்பு பகுதிகளில் பழங்குடியினத்தைச் சோ்ந்த பளியா் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனா். இவா்கள் மூங்கில் மூலம் அரிய வகையான கூடை (கூண்டு) தயாரித்து, அதை மீன் பிடிக்க பயன்படுத்தி வருகின்றனா்.

பளியா் இன மக்களின் மீன்பிடிக் கூடையை செண்பகத்தோப்பு பகுதியைச் சோ்ந்த முருகன் அருங்காட்சியகத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளாா். இந்த கூடையை மே மாதம் முழுவதும் பொதுமக்கள், பள்ளி மற்றும் மாணவ, மாணவிகள் கண்டுகளிக்கலாம் என அருங்காட்சியகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com