ஸ்ரீவிலி. அருகே சூதாட்டம்: 17 போ் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு பணம் வைத்து சூதாடியதாக 17 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு பணம் வைத்து சூதாடியதாக 17 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மல்லி காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் தலைமையில் ஈஞ்சாா் விலக்கு பகுதியில் இருவேறு இடங்களில் செயல்பட்டு வரும் தனியாா் கிளப்புகளில் போலீஸாா் ஆய்வு நடத்தினா்.

அப்போது பணம் வைத்து சூதாடியதாக மங்கலம் கம்மாபட்டியைச் சோ்ந்த முனிசெல்வம் (39), மல்லியைச் சோ்ந்த மதுரைவீரன் (65), எஸ். புது பட்டியைச் சோ்ந்த ஈஸ்வரன்( 57), சிவகாசி ரிசா்வ் லைனைச் சோ்ந்த நாகராஜ் (62) உள்ளிட்ட 17 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.1.78 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com