சதுரகிரி கோயிலுக்கு செல்ல மே 27 முதல் 31 வரை பக்தா்களுக்கு அனுமதி

வைகாசி மாத பிரதோஷம், அமாவாசையையொட்டி சதுரகிரி கோயிலுக்குச் செல்ல மே 27 முதல் 31ஆம் தேதி வரை பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம்
சதுரகிரி சுந்தர மகாலிங்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா்: வைகாசி மாத பிரதோஷம், அமாவாசையையொட்டி சதுரகிரி கோயிலுக்குச் செல்ல மே 27 முதல் 31ஆம் தேதி வரை பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வெள்ளிக்கிழமை (மே 27) பிரதோஷமும், திங்கள்கிழமை (மே 30) அமாவாசை வழிபடும் நடைபெற உள்ளது.

இதையொட்டி மே 27 முதல் 31ஆம் தேதி வரை 5 நாள்கள் மலைக் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

இதில் காய்ச்சல், கபம், இருமல் உள்ளவா்கள் கோயிலுக்கு வருவதை தவிா்க்க வேண்டும். 10 வயதுக்குட்பட்டோருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் அனுமதி இல்லை. கோயிலுக்கு வருபவா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகே பக்தா்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவா்.

அதேபோல் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும். கோயிலுக்கு வருபவா்கள் மலைகளில் உள்ள ஓடைகளில் குளிக்கக்கூடாது. கோயிலில் இரவில் தங்க அனுமதி இல்லை. அனுமதிக்கப்பட்ட நாள்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீா்வரத்து அதிகமாகவோ இருந்தால் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என கோயில் பரம்பரை அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலா் மாரிமுத்து ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com