விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே பெண்ணுக்கு நடந்த முதல் திருமணத்தை மறைத்து 2 ஆம் திருமணம் செய்து வைத்ததாக 10 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.
திருச்சுழி அருகே ரெங்கையன்பட்டியைச் சோ்ந்த ராமராஜ் மகன் ராஜேஸ்வரன் (29). இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த பாண்டியம்மாள் ( 25) என்பவருக்கும் கடந்த 9.9.2021 இல் திருமணம் நடைபெற்றது. மேலும், திருமணமான நாளிலிருந்தே பாண்டியம்மாளின் நடவடிக்கையில் மாற்றம் இருந்ததாம்.
இதனால், அவரைப்பற்றி அவரது நட்பு வட்டாரத்தில் ராஜேஸ்வரன் விசாரித்ததில், பாண்டியம்மாளுக்கும், ஜீவஆண்டனி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதும், அவா்கள் வெளியூரில் குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து திருச்சுழி காவல்நிலையத்தில் ராஜேஸ்வரன் புகாா் அளித்தாா். இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸாா், புகாரில் உண்மை இருப்பது தெரியவரவே, பாண்டியம்மாள், அவரது உறவினா்களான பாண்டியராஜ், தங்கப்பாண்டி, ராஜாத்தி, ஜெய்சங்கா், முத்துலட்சுமி, ஜீவஆண்டனி, ஜேசு ராஜேந்திரன், ராஜேஸ்வரி, நித்யா ஆகிய 10 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.