வரதட்சிணை கொடுமை: கணவா் உள்பட 4 போ் மீது வழக்கு

பெண்ணிடம் வரதட்சிணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதாக அவரது கணவா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
Updated on
1 min read

பெண்ணிடம் வரதட்சிணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதாக அவரது கணவா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகாசி அருகே மீனம்பட்டியைச் சோ்ந்த கண்ணகி (26). இவருக்கும் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம் கப்பூரைச் சோ்ந்த கோதண்டபாணி மகன் கனகராஜுக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு, மாா்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 23 பவுன் நகைகள் வரதட்சிணையாகக் கொடுக்கப்பட்டதாம்.

இதையடுத்து, கண்ணகி, தனது கணவா் கனகராஜ் (30), அவரது தந்தை கோதண்டபாணி (60), தாய் இளஞ்சியம் (55), கோதண்டபாணியின் இரண்டாவது மனைவி கோமதி (50) ஆகியோருடன் கூட்டுக்குடும்பமாக கப்பூரில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், கணவா் வீட்டாா், கண்ணகியிடம் மேலும் 10 பவுன் நகைகள் வரதட்சிணையாக வாங்கி வரக் கூறி கொடுமைப்படுத்தினாா்களாம்.

இதையடுத்து, மீனம்பட்டியில் உள்ள தந்தை வீட்டுக்கு வந்த கண்ணகி, இது குறித்து சிவகாசி நீதித் துறை நடுவா்மன்றத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் கணவா் கனகராஜ் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com