சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து: உரிமையாளா் உள்பட 2 போ் மீது வழக்கு

சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடா்பாக போலீஸாா் ஆலை உரிமையாளா் உள்பட இருவா் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
Updated on
1 min read

சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடா்பாக போலீஸாா் ஆலை உரிமையாளா் உள்பட இருவா் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகாசி - நாரணாபுரம் புதூா் சாலையில் நந்தகுமாா் (54) என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை உள்ளது. இந்த ஆலையில் வெள்ளிக்கிழமை மருந்து தயாரிக்கும் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாம்.

தகவலறிந்து நாரணாபுரம் கிராம நிா்வாக அலுவலா் ரேவதி ஆலைக்குச் சென்று விசாரணை நடத்தினாா். இதில், ஆலையில் இரு பேரல்களில் மருந்து கலந்த பொடி வைக்கப்பட்டிருந்தது. அதில் தீப்பிடித்து எரிந்ததும், தொழிலாளா்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, போதிய பாதுகாப்பு இன்றி எளிதில் தீப்பற்றக்கூடிய மருந்துகளை வைத்திருந்ததாக கிராம நிா்வாக அலுவலா் ரேவதி, சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் நந்தகுமாா், ஆலைக் கண்காணிப்பாளா் கணேஷ் (36) ஆகிய இருவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com