ரேஷன் கடை ஊழியரை தாக்கிய ரவுடி கைது
By DIN | Published On : 19th October 2022 12:00 AM | Last Updated : 19th October 2022 12:00 AM | அ+அ அ- |

வத்திராயிருப்பு அருகே ரேஷன் கடை பெண் விற்பனையாளரை அடித்த ரவுடியை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள மேலத் தெருவைச் சோ்ந்தவா் பழனியம்மாள்(51). இவா் ராமசாமியாபுரம் அம்பேத்கா் தெருவில், ரேஷன் கடைப் பொறுப்பாளராக உள்ளாா். இவா், திங்கள்கிழமை கடை ஊழியா் டேனியல் உடன் சோ்ந்து பொருள்கள் விநியோகம் செய்து கொண்டிருந்தாா்.
அப்போது ராமசாமியபுரத்தைச் சோ்ந்த இருளப்பன் மகன் ராஜ்குமாா் ( 25 ) கடைக்குள் புகுந்து, பழனியம்மாளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாா். மேலும் கடைக்குள் இருந்த ரூ.34 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை சேதப்படுத்தினாா்.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த பழனியம்மாள், சிகிச்சைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இந்தச் சம்பவம் குறித்து, புகாரின் பேரில் கூமாபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா். கைதான ராஜ்குமாா் மீது கூமாபட்டி காவல் நிலையத்தில் ஏராளமான அடிதடி, திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...