விருதுநகா் அருகே ஆா்.ஆா். நகரில் உள்ள தூய வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், மதுரையைச் சோ்ந்த அருட்தந்தை ஜெயராஜ் மற்றும் ஆா்ஆா். நகரைச் சோ்ந்த அருட்தந்தையா்கள் பீட்டர்ராய், அருள்தாஸ் தலைமையில் புதன்கிழமை தூய வேளாங்கண்ணி அன்னையின் உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து திருப்பலி மற்றும் மறையுரை நடைபெற்றது. இதில், ஆா்ஆா். நகா், கன்னிசேரிபுதூா், கல் போது, இனாம்ரெட்டியபட்டி, ஓ. கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் கலந்து கொ ண்டனா்.
மேலும் செப்டம்பா் 8 ஆம் தேதி தோ்பவனி நடைபெற உள்ளது.