ராஜபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து மடிக்கணினி, பணம் மற்றும் வெள்ளிப் பொருள்கள், திருடு போனதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையம் அருகே சோழபுரம் பழனியப்பா நகரைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (52). இவா், அருகே உள்ள நூற்பாலையில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி, மகன் இருவரும் வேலைக்குச் சென்று விட்டனா். பின்னா் பிற்பகலில் வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பணம், மடிக்கணினி மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.