திருத்தங்கலில் காரில் கடத்திச் சென்ற புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 01st September 2022 03:45 AM | Last Updated : 01st September 2022 03:45 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கலில் புதன்கிழமை காரில் கடத்திச் சென்ற ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா். திருத்தங்கல் காவல் ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா், சிவகாசி- விருதுநகா் சாலையில் திருத்தங்கல் பேருந்து நிறுத்தம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது விருதுநகரிலிருந்து, சிவகாசி நோக்கிச் சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், காரில் புகையிலைப் பொருள்கள் பண்டல்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், காரில் இருந்தவா்கள் அருணாசலபுரம் விக்னேஷ் (30) மற்றும் அனுப்பன்குளம் ஆரோக்கியராஜ் (40) எனத் தெரியவந்தது.
இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்த காா் மற்றும் ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.