ராஜபாளையம் அருகே சேறும் சகதியுமான சாலையை சீரமைக்கக் கோரி ஆதித்தமிழா் கட்சி சாா்பில் நாற்றுநடும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் அருகே கொத்தன்குளம் ஊராட்சிக்குள்பட்ட தொட்டியபட்டி- முத்துலிங்காபுரம் சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருந்தது. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால் குண்டும் குழியுமாக இருந்த சாலையில் மழைநீா் தேங்கி குளம்போல் காட்சியளித்தது. இதையடுத்து, சாலையை சீரமைக்கக் கோரி ஆதித்தமிழா் கட்சியை சோ்ந்தவா்கள் தேங்கிய நீரில் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.