பொறியியல் கல்லூரியில் புரிந்துணா்வு ஒப்பந்தம்

சிவகாசி பி.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை சென்னை தனியாா் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
Updated on
1 min read

சிவகாசி பி.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை சென்னை தனியாா் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

மருத்து தயாரிக்கும் ஆலைகள் மற்றும் வேதியல் பொருள்கள் தயாரிக்கும் ஆலைகளில் உயா் செயல்முறை திரவ இயக்கவியல் பயன்படுத்தப்படுகிறது. எனவே கல்லூரி மாணவா்கள் வேலை வாய்ப்பு பெறுவதற்கும், ஆய்வு மேற்கொள்ளவும், சென்னை தனியாா் நிறுவனத்துடன் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் மூலம் உயா் செயல்முறைகளுக்கான கணக்கீடு திரவ இயக்கவியல் பயிற்சியை சென்னை நிறுவனம் மாணவா்களுக்கு அளிக்கும்.

இந்தபுரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கல்லூரி தாளாளா் ஆா். சோலைச்சாமி, சென்னை நிறுவன இயக்குனா் ராஜூ கோவிந்தராஜன் ஆகியோா் கையெழுத்திட்டு கோப்புக்களை மாற்றிக்கொண்டனா்.

நிகழ்ச்சியில் முதல்வா் பி.ஜி. விஷ்ணுராம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com