விருதநகரில் மாணவா்கள் விழிப்புணா்வுப் பேரணி
By DIN | Published On : 12th September 2022 12:00 AM | Last Updated : 12th September 2022 12:00 AM | அ+அ அ- |

தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு, விருதுநகரில் கல்லூரி மாணவா்கள் விழிப்புணா்வுப் பேரணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
விருதுநகா் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இப்பேரணியில் செந்திக்குமார நாடாா் கல்லூரி மாணவா்கள் 200 போ் கலந்து கொண்டனா். அதில் தற்கொலைக்கு எதிரான வாசகங்களை கையில் ஏந்தியவாறு ராமமூா்த்தி சாலையில் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். முடிவில் கல்லூரி வளாகத்தில் பேரணி நிறைவடைந்தது. இதில், சுகாதாரத் துறை அலுவலா்கள் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.