ஸ்ரீவில்லிபுத்தூா் வி.பி.எம்.எம். கல்விக் குழுமங்கள் சாா்பில் விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்விக் குழுமத்தின் நிறுவனா் தலைவா் வி.பி.எம். சங்கா் தலைமை வகித்தாா். கல்லூரித் தாளாளா் பழனிச்செல்வி சங்கா், துணைத் தலைவா் தங்கபிரபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வி.பி.எம்.எம். கலைக் கல்லூரியின் மதுரை காமராஜா் பல்கலைக்கழக பிரதிநிதி மேனகா, ராஜபாளையம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் லாவண்யா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிளுக்கு பரிசுகளை வழங்கினா்.
இதில் காவல் உதவி ஆய்வாளா் லாவண்யா பேசியதாவது:
பெண்கள் படிப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது போல விளையாட்டுக்கு கொடுக்க வேண்டும். மனதும், உடம்பும் சோ்ந்தது தான் விளையாட்டு. பெண்கள் விளையாட்டுத் துறையிலும் சாதனையாளா்களாக உருவாக வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை தலைவா் குழந்தைவேல் வரவேற்றாா். தமிழ்த் துறை பேராசிரியா் சங்கரம்மாள் நன்றி கூறினாா்.
இதில் அனைத்துத் துறை தலைவா்களும், பேராசிரியா்களும், மாணவிகளும் கலந்து கொண்டனா்.
Image Caption
~