சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

எட்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, விருதுநகா் போக்சோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
Updated on
1 min read

எட்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, விருதுநகா் போக்சோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாலவநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் போஸ் (62). கூலி தொழிலாளியான இவா், கடந்த 21.9.2022-இல் 3-ஆம் வகுப்பு மாணவியான 8 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகப் புகாா்

கூறப்பட்டது. அதன்பேரில், அருப்புக்கோட்டை மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, போஸை கைது செய்தனா். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், முதியவா் போஸூக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பூா்ணஜெய ஆனந்த் தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com