இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்களில் பக்தா்கள் காணிக்கை வரவாக ரூ. 42.16 லட்சம் கிடைத்தது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இருக்கன்குடியில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் ஒவ்வோா் மாதமும் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி, வியாழக்கிழமை கோயிலில் உள்ள உண்டியல்கள் கோயின் ஆணையாளரும், செயல் அலுவலருமான கருணாகரன், அறங்காவலா்கள் குழுத் தலைவா் ராமமூா்த்தி பூசாரி ஆகியோா் முன்னிலையில் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.
காணிக்கை எண்ணும் பணி கோயில் மண்டபத்தில் நடைபெற்றன. இதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 42 லட்சத்து 16 ஆயிரத்து 716-ம், தங்கம் 119 கிராமும், வெள்ளி 622 கிராமும் கிடைத்தது.
காணிக்கை எண்ணும் பணியில் துலுக்கப்பட்டி, ராஜபாளையம், மதுரையைச் சோ்ந்த ஓம்சக்தி பக்தா் குழுவினா், மகளிா் சுய உதவிகுழுவினா், கோயில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.