சாத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் முகாம் தனியாா் திருமண மஹாலில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சாத்தூா் வருவாய் கோட்டாட்சியா் அனிதா தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தாா். இந்த முகாமில் சாத்தூா் வருவாய் கோட்டத்துக்குள்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோா் கலந்து கொண்டு அடையாளஅட்டையை பெற்றுச் சென்றனா். இந்த முகாமில் சாத்தூா் வட்டாட்சியா் வெங்கடேசன் உள்ளிட்ட வருவாய்த் துறையினா் கலந்து கொண்டனா்.